8 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட நபர் விளக்கமறியலில்

0 208

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டு வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது நேற்று உத்தரவிட்டார்.

பேராறு, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் சிறுமியின் வீட்டில் மலசல குழி வேலைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் சிறுமியின் தாயார் தேவை காரணமாக வெளியில் சென்ற நிலையில் எட்டு வயதுடைய சிறுமியின் ஆடைகளை கழற்றி துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்றதாக கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் சிறுமின் தயாரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வேண்டி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்காப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.