ஜூன் முதல் இலங்கையில் அமுலுக்கு வருகிறது புதிய தடை

0 178

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு சில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை வெளியிடுவதை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சின் செயலாளர்.

பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

அதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் முதல் பிளாஸ்டிக் கப், ஸ்பூன், தட்டுகள், முட்கரண்டி, மாலைகள் மற்றும் பாய்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.

நாட்டில் தேவைக்கு அதிகமாக இருப்புக்கள் உள்ளத்தால், பிளாஸ்டிக் துகள்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

அத்துடன் குறித்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதனால் சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களை பயன்படுத்தி தொழிலை தொடங்க காத்திருப்போரை ஊக்குவிக்கவுள்ளது.

மேலும் மக்களின் வாழ்வதாரத்திற்கு உதவும். சந்தை தேவை மற்றும் பிற காரணிகளை பொறுத்து ஏனைய நாடுகளில் இருந்து சில பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.