பேருந்து நிலையத்தில் தனித்து விடப்பட்டிருந்த சிறுமி- விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!

0 221

சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 19 மற்றும் 24 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற 15 வயதுச் சிறுமியிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்று முன்தினம் இரவு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, இருவேறு நேரங்களில் 2 இளைஞர்களினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ வல்லுநரின் மருத்துவ அறிக்கைக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.