கேசரா உயிரிழந்தமைக்கான காரணம் என்ன?

0 110

ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவில் வசித்து வந்த ‘கேசரா’ என்ற சிங்கம் ஆண் சிங்கம் உயிரிழந்துள்ளது.

கேசரா அக்டோபர் 2017ம் ஆண்டு பிறந்துள்ளது எனவும் கேசராவைப் பெற்றெடுத்த உடனேயே தாய் சிங்கம் இறந்ததாகவும் பின்னர், கேசரா தொழிலாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பின், இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு தான் இதன் இறப்புக்கான காரணம் என கால்நடை மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், சிங்கத்தின் திசு மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.