மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட சீருடை விநியோகம் இன்று ஆரம்பம்
பாடசாலை சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் விநியோகம் இரண்டாம் கட்டமாக நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.
ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு அமைவாக இன்றைய தினம் குறித்த சீருடைகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி 4.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிக்கு மாணவர்களுக்கு இந்த சீருடைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
இதேவேளை சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சீருடைகள் 70 வீதமான மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.