றிசாட் பதியுதீனின் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் அதிரடி கைது…

0 270

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆடசிக்காலத்தின்போது லங்கா சதொஷவிற்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

திருகோணமலை கிண்ணியா பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (15) காலை 6.30 மணியளவில் அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.