சின்னத்திரை நடிகர் சித்திராவின் கணவரான ஹேமந்த் கைது..

0 80

சின்னத்திரை நடிகர் சித்ராவின் மரண வழக்கில் அவரின் கணவரான ஹேமந்த் நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த சிலதினங்களாக சின்னத்திரை நடிகர் சித்திரா தற்கொலை செய்துகொண்ட விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் பேசுபொருளாகவும் காணப்படுகின்றது.

இந்த நிலையிலேயே தொடர் விசாரணைகளுக்கு முகம்கொடுத்து வந்த சித்திராவின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது மனைவியை தற்கொலைக்குத் தூண்டினார் எனும் குற்றச்சாட்டிலேயே ஹேமந்த் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

சின்னத்திரை நடிகரான சித்ரா கடந்த 9ஆம் திகதி நசரத் பேட்டை அருகில் உள்ள விடுதியின் அறை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

சடலமாக மீட்கப்பட்ட சித்திர தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மருத்துவ பரிசோதனைகளின் படி தெரிவிக்கப்பட்டது.

சித்திராவுக்கு ஹேமந்த் என்பவருடன் சில நாட்களுக்கு முன்பு பதிவுத்திருமணம் நடைபெற்றிருந்தது.

இந்த நிலையில் கோட்டாட்சியர் உத்தரவுக்கமைய ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக சித்ராவின் தாயார் விஜயா, தன் மகளின் மரணத்திற்கு ஹேமந்த்தான் காரணம் என வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இதனை ஹேமந்த்தின் பெற்றோர் மறுத்திருந்த போதும் காவல்துறையினர் ஹேமந்த்திடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையிலேயே விசாரணைகளின்படி சித்த்த்திராவை தற்கொலைக்கு தூண்டினார் எனும் குற்றச்சாட்டில் ஹேமந்தை நேற்று திங்கட்கிழமையன்று இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.