பிரதமர் மகிந்தவுக்கு செல்வம் அடைக்கல நாதன் அவசரக் கடிதம்.

0 82

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

வன்னி மாவட்டத்தில் ஏற்பட்ட புயலினால் பாதீக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக இழப்பீட்டை வழங்க வலியுறுத்தி பிரதமருக்கு அவர் இந்த கடிதத்தை இன்று அனுப்பியுள்ளார்.

இதற்கமைய குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,,,,

வன்னி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அண்மையில் ஏற்பட்ட புரவி புயலின் தாக்கத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் காற்று மழை காரணமாக கட்டிட இடிபாடுகள், மீன் பிடி படகுகள், இயந்திரங்கள், வலைகள், கடல் உபகரணங்கள், விவசாயம், சொத்துக்கள், உடைமைகள், குடியிருப்புகள் சேதமடைந்தும், காணாமலும் போயுள்ளன.

அத்துடன் பெரும்பாலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்த நிலையில் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கிய விவசாயிகளினால் அந்த கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது அவர்கள் எவ்வாறு இந்த சூழ் நிலையிலிருந்து மீள முடியும்?.

எனவே இந்த மக்களின் அவல நிலையைப் பார்க்கவும், இந்த சூழ் நிலையிலிருந்து மீண்டு அவர்களின் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்தவும் உதவுமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

எனவே பாதீக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை விரைவில் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மக்களின் துன்பத்தைத் தணிக்க நீங்கள் முயற்சிப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவும் செல்வம் அடைக்கலநாதன் எழுதியுள்ள குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.