புதிய கொரோனா தொற்று கண்டுபிடிப்பு. இலங்கை உள்ளிட்ட 40கும் மேற்பட்ட நாடுகள் விமான பயணத்தை ரத்து செய்துள்ளன.

0 52

பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்கள் இலங்கையில் தரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதனை தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை அதிகாலை 2 மணியில் இருந்து இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எனவே மறுஅறிவித்தல் வரும் வரை பிரித்தானிய விமானங்கள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய கொரோனா தொற்று குறித்து சர்வதேச நாடுகள் மத்தியில் எச்சரிக்கை அதிகரித்துள்ள நிலையில் 40 ற்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது தமக்கான விமான பயணத்தை இரத்து செய்துள்ளன.

இந்த நிலையிலேயே இலங்கை அரசும் இந்த முடிவை எடுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.