வட மாகாணத்தில் இன்று கோவிட் 19 தொற்றுக்கு உள்ளவர்கள் விபரம்..

0 57

இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்றைய தினம் 412 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய வட மாகாணத்தை சேர்ந்த 3 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கும் கிளிநொச்சி – பாரதிபுரத்தை சேர்ந்த இரண்டு பேருக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முழங்காவில் கடற்படை முகாமில் 2 பேருக்கும், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.