சிறைகளில் பரவிவரும் கோவிட் தொற்றால் அவதிப்படும் அரசியல் கைதிகள்.

0 59

தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற ஓடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைப்பித்துள்ளார்.

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் பலர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கைதிகள் இதுவரையில் விடுதலை செய்யப்படாமல் தடுத்து வாய்க்கப்பட்டுள்ளது வேதனைக்குரிய விடயம்.

இந்த நிலையில் தற்போது சிறைச்சாலைகளில் கோவிட் தொற்று பரவி வரும் நிலையில் தமிழ் அரசியல் கைதிகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இந்த அவளை நிலையை கருத்திற்கொண்டு அணைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பு அடிப்படையிலோ அல்லது பிணையிலோ விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.