தமிழர்களின் உணர்வுகளை அழித்தாலும் அழியாது – நா.உ சாணக்கியன் எச்சரிக்கை.

0 82

தமிழர்களின் உரிமை அல்லது உணர்வுகளை அழித்தாலும் அவை அழியாதது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நேற்று இரவு யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்து அளிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை கண்டித்து அவர் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், போர் வெற்றியை கொண்டாடும், பறைசாற்றும் தூபிகள் மற்றும் சின்னங்கள் வட மாகாணத்தில் பல இடங்களில் காணப்படுகின்றது.

ஆனால் இறுதி யுத்தத்தில் இறந்து போன எமது உறவுகளை நினைவு கூறும் தூபிகள் மாத்திரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவங்கள் மூலம் அவர்கள் தமிழர்களான எமக்கு எதனை வலியுறுத்த முயல்கின்றனர். இதில் கூட எமக்கான எமது தமிழ் மக்களுக்கான உரிமை இல்லையா?.

நாட்டில் ஆட்சி மாற்றமும் அடிப்படை உரிமையில்லாத அபிவிருத்திக்கான மாற்றமே இதற்கான முக்கிய காரணம் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.