P2P போராட்டம் நா.உ சிறிதரனிடம் விசாரணை.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றமை குறித்து இன்று தம்மிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தனது காரியாலயமான அறிவகத்தில் வைத்து இன்று வாக்குமூலம் பெறப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசாரினால் இன்று எனது காரியாலயமான அறிவகத்தில் வைத்து வாக்கு மூலம் பெறப்பட்டது….#P2P #Police #Arivakam #Kilinochchi #ShritharanMP pic.twitter.com/AsnrdGP6OV
— Shritharan Sivagnanam (@ImShritharan) March 1, 2021
அத்துடன் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் இவ்வர்று வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிடுவர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பாக நாளடாளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரணைகள் டம்பற்று வருகின்றது.
ஏற்கனவே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே பல மணிநேர விசாரணைகளுக்கு உதடுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்றய தினம் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.