இரணைமடுவில் அடக்கம் – அரசின் தீர்மானத்தை எதிர்த்து நாளை போராட்டம்.

0 98

கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணைதீவு பகுதி மக்கள் நாளையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

அத்துடன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இரணை தீவு பங்கு தந்த மடுத்தீன் தெரிவித்துள்ளார்

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய முஸ்லீம் சகோதரர்களால் பல்வேறு பட்ட பகுதிகள் முன்னொழியப்பட்டுள்ளது.

எனினும் அவற்றை தவித்து யுத்ததால் இடம் பெயர்ந்து பல இன்னல்கள் மத்தியில் 2017 ஆண்டு பல கட்ட போராட்டங்களின் பின்னர் குடியேறிய எமது இரனை தீவு பகுதிகளில் உடல்களை அடக்கம் செய்ய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசின் இந்த செயற்படு கவலை அழிப்பதுடன் தமக்கு மகிழ்சி இன்னைமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இரனைதீவு பகுதியானது நீரேந்து பிரதேசமாக காணப்படுவதனால் கொரோனா தொற்றுள்ள உடல்களை புதைபதனால் நீரூடாக தொற்றுபரவ வாய்புள்ளதாகவும் அன்மை காலமாகவே இரணை தீவு மக்கள் குடியேறி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிவருகின்ற நிலையில் அரசாங்கத்தின் இம்முடிவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதிலை எனவும் தெரிவித்துள்ளார்

தற்போது 165 குடும்பங்கள் அட்டை பண்ணைகளை அமைத்து அங்கு வசித்துவருவதால் அவர்களின் பாதுகாப்பும் கேள்விகுறியாகியுள்ளது.

எனவே மக்கள் அனைவரும் இணைந்து நாளைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதுடன் யாழ்பாண மனித உரிமை அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.