யாழில் ஒரே நாளில் 21 பேருக்கு தொற்று..

0 245

வடக்கு மாகாணத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி யாழ் மாவட்டத்தில் ௨௧ தொற்றாளர்களும் மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பல்கலைக்கழக மருத்துவப்பீட ஆய்வுக்கூடங்களில் நேற்று 600 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

குறித்த பரிசோதனை முடிவுகளின் படியே 23 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.