தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய மேலும் 646 பேர் கைது

0 108

நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணித்தியாலங்களில்646 பேர் கைதுசெயப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் இதுவரை 72,113 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திற்குள் நுழையக்கூடிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 13 சோதனைச்சாவடிகளில் 2052 பேரிடம் பொலிஸார் நேற்று சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது அனுமதியின்றி மேல்மாகாணத்திற்குள் நுழைய முயன்ற 198 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.