வீடொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்பு

0 206

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உல்பத்வெவ பகுதியில் வீடொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இச் சடலம் இன்று (04) மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ.நளீன் சமிந்த (40வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் இரண்டாவது மனைவியுடன் தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும் கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருந்திருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பெயரில் ஆறுமாதம் சிறையிலிருந்து பிணையில் விடுதலையாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.