5 வது வாரமாக உயா்ந்த புதிய கொரோனா பாதிப்பு!

0 214

ஐரோப்பாவில் தொடா்ந்து 5 ஆவது முறையாக புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் வாராந்திர எண்ணிக்கை உயா்ந்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட வார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தைவிட 6 சதவீதம் அதிகமாகியுள்ளது.

இதன் மூலம், தொடா்ந்து 5 ஆவது வாரமாக அந்த எண்ணிக்கை உயா்ந்துள்ளது. அதற்கு முன்னா், முந்தைய வாரத்தைவிட 18 சதவீதம் அதிகமாக புதிய கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.