பிழையான தகவலை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்திய பசில்

0 221

கோவிட் தொற்று நோய் காரணமாக அரசாங்கத்திற்கு 500 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பிக்கும் போது நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கடந்த செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பசில் ராஜபக்ஷ கோவிட் தொற்று நோய் காரணமாக அரசாங்கத்திற்கு 1500 – 1600 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதற்கமைய இந்த உரை முழுமையாக பிழையானதென தென்னிலங்கை ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.