சிவனொளிபாதமலைக்கு சென்ற இருவர் உயிரிழப்பு- லிஸ்டீரியோசிஸ் தொற்று நோய் தடுப்பு பிரிவு விளக்கம்
சிவனொளிபாதமலைக்கு சென்ற மேலும் இருவர் உயிரிழந்தமையை அடுத்து இந்த நோய் குறித்த கருத்தாடல் அதிகரித்தது.
லிஸ்டீரியோசிஸ் தொற்றுநோய் நாட்டில் இல்லை எனவும் அது குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி கொள்ள தேவையில்லை என தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், அவர்களது உயிரிழப்பு லிஸ்டீரியாவால் ஏற்பட்டது என இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. மரண பரிசோதனைகளின் போது பெறப்பட்ட மாதிரிகளில் தற்போது ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாக தொற்று நோய் தடுப்புப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
லிஸ்டீரியா மொனோசைட்டஜன் பக்றீறியா தொற்றால் ஏற்படும் இந்த நோயால் சிவனொளிபாதமலைக்கு செல்லும் ஒரு வழியில், சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிக்கை விடுத்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.