மஹர சிறைச்சாலையில் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் திடீர் மரணம்

0 27

கம்பஹா – மஹர சிறைச்சாலையில் கைதியாக இருந்த 45 வயது பாகிஸ்தான் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த பல வருடங்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர் என்று சிறைச்சாலை தலைமையகம் தெரிவிக்கின்றது.

இவருக்கு திடீரென நோயின் தாக்கம் அதிகரித்தமையினால் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

எனினும் குறித்த நபருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source
Leave A Reply

Your email address will not be published.