வடமாகாண பாடசாலைகள் அனைத்துக்கும் பூட்டு

0 29

கிழக்கு மாகாணத்தைத் தொடர்ந்து வடமாகாண பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இதன்படி நாளை முதல் பாடசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் சாள்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளையும், நாளை மறுதினமும் பாடசாலைகள் மூடப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கின்றார்.

புயல் அச்சுறுத்தல் காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதவேளை புயல் அச்சுறுத்தல் காரணமாக கிழக்கு மாகாணத்திலும் பாடசாலைகளை மூன்று தினங்களுக்கு மூடநடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.