புரவி சுறாவளி கிழக்கு பகுதியின் ஊடாக நகரும் அபாயம்!!

0 160

புரவி சுறாவளி இன்று இரவு 7 மணி முதல் 10 மணி வரையான காலப்பகுதிக்குள் கிழக்கு மாகாணத்தில் ஊடாக நகர்ந்து இலங்கையை கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதன்பொது கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடையிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.