விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை.

0 37

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து சுற்றுலா தொழில் துறையை முன்னெடுப்பதற்காக விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில்  சுகாதார அமைச்சர்  பவித்ரா வன்னியாரச்சி, ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்றுநோய் மற்றும் COVID-19 நோயை கட்டுப்படுத்தும் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்  வைத்தியர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
இதன்போது சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக விமான நிலையத்தை திறந்து, சுற்றுலா தொழில்துறையை மேம்படுத்துவதற்கு தேவையான சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளை தயாரிப்பதற்கான ஆரம்பத் திட்டத்தை வகுப்பதற்காக  இணைப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்த குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு அழைப்பது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சுற்றுலா அமைச்சு, சுற்றுலாத் துறையை சேர்ந்த  பிரதிநிதிகள் இந்த குழுவில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.