மொறட்டுவையில் கோரா விபத்து !! இரண்டு குழந்தைகளின் உயிரை காவு கொண்ட மோட்டார் சைக்கிள் பந்தயம்.

0 83

மொறட்டுவை – எகொடஉயன பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

கர்ப்பணித் தாய் ஒருவர், 7 வயது மற்றும் ஒரு வயதான குழந்தைகளுடன் வீதி கடவையில், வீதியை கடக்க முயற்சித்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்றிலேயே குறித்த மூவரும் மோதுண்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மூவரும், பாணந்துரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த குழந்தைகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றார்.

Leave A Reply

Your email address will not be published.