வவுனியா சிறைச்சாலையில் ஒருவருக்கு கொரோனா..நீதிமன்ற செயற்பாடுகள் முடக்கம்..

0 49

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருகோணமலையை சேர்ந்த குறித்த நபருக்கு கடந்த 12ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது.

நேற்றயதினம் பரிசோதனைக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றது. அதன்படி அவருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் இன்றய தினம் வவுனியா நீதியின்மன்ற வளாகத்திற்குள் எவரும் உடசெல்ல அனுமதிக்கப்படவில்லை.

அத்துடன் இன்று பொலிஸாரால் தொடரப்பட்ட புதிய வழக்குகளின் சந்தேக நபர்கள் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்ட்துடன் நீதிமன்ற வளாகம் தொற்று நீக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பான ஏனைய நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

Leave A Reply

Your email address will not be published.