வவுனியா பல்கலைக்கழக மாணவனுக்கு கொரோனா தொற்று..

0 19

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவன் ஒருவர் கொழும்பு சென்றநிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வடக்கை சேர்ந்த குறித்த மாணவர் வெளிநாடு ஒன்றிற்கு செல்வதற்காக கொழும்பு சென்ற நிலையில் கொழும்பு டேர்டன்ஸ் தனியார் மருத்துவமனையில் அவருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.குறித்த மாணவனிடம் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் பிரகாரம் 5 நண்பர்களுடன் நெருங்கி பழகியதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இணையவழிமூலம் மாத்தி்ரமே கலந்துகொண்டுள்ளார்.

இதேவேளை அவருடன் பழகிய குறித்த 5 பேர் தொடர்பாக சுகாதர பிரிவினர் கவனம் செலுத்திவருவதுடன், மாணவனை கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அவர் வவுனியாவில் தங்கியிருந்த பகுதிகள் தொடர்பாகவும் சுகாதாரபிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.