மன்னார் மறை மாவட்ட ஆயர் தலைமையில் விசேட கிறிஸ்மஸ் திருப்பலி

0 51

2020 கிறிஸ்மஸ் தின திருப்பலியானது மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி லயனல் இமானுவெல் பெர்னாண்டோ அவர்களின் பங்கு பற்றுதலில் மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தின் பங்குத்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளாரின் தலைமயில் இன்று காலை 6.00 மணிக்கு இடம் பெற்றது

மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மனுவல் பெர்னாண்டோ அவர்களினால் கிறிஸ்மஸ் திருவிழா திருப்பலி கூட்டத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முககவசங்கள் அணிந்த வண்ணம் ஒரு தொகுதி கிறிஸ்தவ மக்கள் திருப்பலியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்

அதே நேரத்தில் மக்களின் ஆன்மிக நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பங்குகளிலும் வெவ்வேறு நேரங்களில் குறிப்பிட்ட அளவு மக்களின் பங்கு பற்றுதலுடன் திருப்பலிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது..

Leave A Reply

Your email address will not be published.