வவுனியாவில் மேலும் இரு கொரனா தொற்றாளர்கள்..

0 83

வவுனியா பட்டானிச்சூரில் வசித்த இருவருக்கு கொரனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணி பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மற்றையவர் 6 ஆம் ஒழுங்கையில் வசிக்கும் கிளிநொச்சி பொறியியல் பீட மாணவன் என்பதுடன் அவருக்கான பரிசோதனை கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட போதே தொற்று உள்ளமை தெரியவந்துள்ளது.

இந் நிலையில் பட்டானிச்சூரை முடக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.