வவுனியாவில் அதிகரிக்கும் கொரோன தொற்றாளர்கள்..

0 121

வவுனியவை சேர்ந்த மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்தவாரம் வவுனியா பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து பட்டாணிச்சூர் கிராமம் கடந்த ஒருவார காலமாக முடக்கப்பட்டள்ளதுடன் குறித்த நபர்களுடன் தொடர்புகளை பேணிய பலருக்கு பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய குறித்த பகுதியில் நேற்று முன்தினமும் 146 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

பரிசோதனை முடிவுகளின்படி 100 பேருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 40 பேரின் முடிவுகள் மீள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது

இதற்கமைய குறித்த 40 பேரில் பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 6 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் ஒருவரது மாதிரிகள் மீளவும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் வவுனியாவின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை வவுனியாநகர வியாபார நிலையங்களில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 106 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் 36 பேரது மாதிரிகள் மீளவும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.