P2P போராட்டம் – அமெரிக்காவை பாதிக்க வைத்த கொழும்பு ஊடகங்கள்.

0 115

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகங்கள் கவனம் செலுத்தாதமை ஆச்சரியம் அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவர் குறிப்பிட்டுள்ள அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் அமைதியான எதிர்ப்பு போராட்டங்கள் இடம் பெறுவது முக்கியமானதும் உரிமையும் கூட அவற்றை நியாயமாக அக்கறையுடன் அணுக வேண்டும்.

இந்தப் போராட்டம் தொடர்பில் தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டதை பார்த்தேன்.

ஆனால் கொழும்பை தளமாக கொண்ட ஊடகங்கள் ஏன் இதற்கு முக்கியத்துவத்தை வழங்கவில்லை என ஆச்சரியப்பட்டேன்.

அமைதிவழிப்போராட்டம் என்பது அடிப்படை ஜனநாயக உரிமைகளில் ஒன்றாகும்.

இவ்வாறான அமைதிவழிப் போராட்டங்களுக்கு செவிசாய்க்கவேண்டும்.

அவர்களின் கவலைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.