சாட்டை அடி கொடுத்த மஹிந்த தரப்பு – பதில் வழங்க திராணி அற்றுப்போன தமிழ் எம்.பிகள்!

0 292

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழ் பாதுகாப்பு பிரிவினர் மீது நம்பிக்கை இல்லாத போன்று தமக்கு தோன்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இலங்கையில் தமிழர்களும் “நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளாக கடமையாற்றி வருகின்றனர்.

ஆனால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பாதுகாப்புக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழர்களை பெற்றுக்கொள்வதில்லை.

மாறாக தமது பாதுகாப்புக்காக சிங்கள பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வைத்துக்கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர் எனவும் அவர் இதன்போது குற்றம் சுமத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.