பொது சுகாதார பரிசோதகர்களை தாக்க முயன்ற நபர் கைது

0 216

முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் இருவரை தகாத வார்த்தைகளால் தூற்றி, அவர்களை தாக்க முயன்ற சந்தேக நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

காலி, நெலுவ பிரதேசத்தில் மரண வீடொன்றில் கலந்துகொண்ட ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்துள்ளார். இதனால் பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த நபரை எச்சரித்துள்ளனர்.

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களை குறித்த சந்தேகநபர் தகாத வார்த்தைகளால் தூற்றி, அவர்களை பொல்லினால் தாக்க முயன்றுள்ளார். எனினும் அங்கிருந்தவர்கள் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.