சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த நபர் கைது

0 205

பலாலி அன்ரனிபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் அரச மதுபானங்களை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, குறித்த நபர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக பலாலி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் 180 மில்லி லீட்டர் கொள்ளளவுடைய 8 சீல் செய்யப்பட்ட அரச மதுபானங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.