கருப்பு பூஞ்சை நோய்க்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்ட பகுதிகள்

0 155

கொவிட் தொற்றாளர்களுள் கருப்பு பூஞ்சை நோய்க்கு உள்ளானவர்கள் கொழும்பு, குருநாகல் மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் இருந்து இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இவ்வாறு இதனை தெரிவித்துள்ளார்.

கறுப்பு பூஞ்சை என்பது சுற்றாடல் சார்ந்த நோயாகும். இது குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

முகத்தில் அல்லது உடலில் ஏதேனும் வித்தியாசமான பருக்கள் மற்றும் அடையாளங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.