15 இலட்சம் ரூபா பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

0 137

15 இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவிஸ்ஸாவெல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தல்தூவ மற்றும் வெல்லவீதிய பகுதிகளில் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 முதல் 41 வயதிற்கு உட்பட்ட கொழும்பு மற்றும் அவிஸ்ஸாவெல்ல பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.