தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்ஜீவிக்கு கொரோனா…!!!

0 39

இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு ஓரளவிற்கு குறைந்திருந்தாலும் சில மாநிலங்களில் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

சினிமா தொடங்கி அரசியல் வரை பல்வேறு பிரபலங்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்ஜீவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஆச்சாரியா திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு முன்பாக செய்யப்பட்ட பரிசோதனையில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லையென்றும், வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தன்னுடன் தொடர்வில் வந்த அனைவரும் பரிசோதித்து கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் நாகர்ஜூன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரையும் சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது மூவருமே முககவசம் இல்லாமல் இருந்துள்ளதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.