வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது என்டிஜன் பரிசோதனை!

0 194

கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கு அண்மையில் வியாபாரம் மேற்கொண்ட வியாபாரிகள் பொது மக்கள் என பலருக்கும் என்டிஜன் பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டது.

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு வரும் ஒக்டோபர் முதலாம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதியில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினர் இணைந்து என்டிஜன் பரிசோதனையை மேற்கொண்டனர். இதன்போது சிலருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

நேற்று (17) மாலை மதுபானசாலைகள் விற்பனையில் ஈடுபடலாம் என்ற செய்தி பரவிய நிலையில் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை மீறி மதுபானங்களை கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

அவற்றை கண்காணிக்காத சுகாதாரப் பிரிவினரும் பொலிசாரும் சந்தை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக அங்கு நின்ற பலரும் விசனம் வெளியிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.