மரம் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

0 163

மாத்தளை பொலிஸ் பிரிவில் உன்னஸ்கிரிய பிரதேசத்தில் மரமொன்றை வெட்டுவதற்கு உதவி செய்து கொண்டிருந்த 16 வயது சிறுவன் மீது மரம் விழுந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உன்னஸ்கிரிய, எல்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாத்தளை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.