நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு : இருவர் மாயம்

0 162

கல்குடா, ஹொரவபொத்தானை மற்றும் நோட்டன் பிரிட்ஜ் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீரிழ் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதோடு , மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கல்குடா பொலிஸ் பிரிவில் அலிகல கடலில் நீராடச் சென்ற மூவரில் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மாணிக்கபுறம் , கும்புறுமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கல்குடா பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவில் வாவியொன்றில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். கம்மெத்த – ஹொரவபொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவில் லொனக் தோட்டத்தில் ஆறொன்றில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

நோட்டன் பிரிட்ஜ் மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 35 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.