பால்மா விலை நிர்ணயம் தொடர்பில் வாழ்க்கைச்செலவு குழு நாளை கூடவுள்ளது

0 208

வாழ்க்கைச்செலவு குழு நாளைமுற்பகல் 10 மணியளவில் அலரிமாளிகையில் கூடவுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்துள்ளார்.

பால்மா விலை அதிகரிப்பது தொடர்பில் முவைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் பால்மா விலை அதிகரிப்பு, கப்பல் கட்டணம் உயர்வு மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி என்பனவற்றை கருத்திற்கொண்டு பால்மா விலையினை அதிகரிக்குமாறு அதன் இறக்குமதியாளர்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்தை கோரியிருந்தனர்.

எனினும், விலை அதிகரிப்பிற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.

இதனையடுத்து, தங்களுக்கு ஏற்படும் நட்டத்தினை கருத்திற்கொண்டு பால்மா இறக்குமதியினை அதன் இறக்குமதியாளர்கள் இடைநிறுத்தியிருந்தனர்.

இதனால் சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் பால்மா இறக்குமதியாளர்களுக்கும், நிதி அமைச்சருக்கும் இடையில் கடந்த 19 ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது ஒரு கிலோகிராம் பால்மா விலையினை 350 ரூபாவால் அதிகரிக்க வேண்டுமென இறக்குமதியாளர்களால் கோரப்பட்டது.

எனினும் ஒரு கிலோகிராம் பால்மா விலையினை 200 ரூபாவினால் அதிகரிப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டது.

இதற்கமைய இது தொடர்பிலான இறுதி தீர்மானமானது நாளை இடம்பெறவுள்ள வாழ்க்கைச் செலவு குழு மூட்டத்தில் எட்டப்படவுள்ளது.

அவ்வாறான பின்னணியில் தேசிய பால்மாக்களின் விலைகளையும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளுர் பால்மா உற்பத்தி நிறுவன்களின் பிரதிநிதிகள் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின் போது இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

தேசிய பால் விவசாயிகள் முகங்கொடுக்கும் இன்னல்களை தடுக்கவும் உள்ளுர் பால்மா உற்பத்தியாளர்களை வலுப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதன்படி இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகளுக்கமைய தேசிய பால்மாக்களின் விலைகளையு; அதிகரிக்குமாறு உள்ளுர் பால்மா உற்பத்தி நிறுவனங்கள் கோரியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.