கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் பலி – ஒருவர் காயம்

0 163

மிருக வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (23) மாலை திருப்பனே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முரியாகல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

60 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மூவர் குறித்த பகுதியால் நடந்து சென்ற சந்தர்பத்தில் இருவர் மீது துப்பாக்கி சுடப்பட்டுள்ளது.

இதனை ஊர்மக்களுக்கு அறியத்தருவதற்காக ஓடி சென்ற மூன்றாவது நபர் மீது வேறு ஒரு கட்டுத் துப்பாக்கி வெடித்து அவரும் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.