விடுதலைப்புலிகள் இயக்கம் மீள் உருவாக்கம் 15 பேர் அதிரடி கைது..
இலங்கையை சேர்ந்த 15 இளைஞர்களை இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் கைது செய்துள்ளது.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இந்திய ஊடகங்கள்.
இவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக குறித்த முகவரகம் குற்றம் சுமத்தியுள்ளது.
அதன்படி கைது செய்யப்பட்டவர்கள் ஆயுதக்கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களின் போது கைது செய்யப்பட்டதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி அராபியக்கடலில் மீன்பிடிப்படகில் வைத்து கைதுசெய்யப்பட்டவர்களும் இதில் அடங்குதாக்க தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் சிங்களவர்கள் எனவும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.