சிறைக்கைதிகளை இனி பார்வையிட அனுமதி

0 210

ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவலை சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கைதிகளை பார்வையிடும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்ற நிலையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.