நொச்சிக்குளம் வாள் வெட்டு- சந்தேக நபர்கள் மூவருக்கு விளக்கமறியல்

0 188

திருகோணமலை – நொச்சிகுளம் பகுதியில் வாளால் வெட்டிக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தலைமறைவான நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் றஸ்ஸாக் முன்னிலையில் சந்தேக நபர்களை இன்று (11) ஆஜர்படுத்தியபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாந்திபுரம் துர்க்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சாமி ஆடுவதற்கு சில தரப்பினர் தடை விதித்தமையினால் இரண்டு குழுக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி மாலை 6.45 மணியளவில் நொச்சிக்குளம்-சாந்திபுரம் பகுதியில் ஏற்கனவே வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபம் கொண்ட ஒரு குழுவினர் மற்றைய குழுவினரை வாளால் வெட்டிக் காயப்படுத்திய நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் குறித்த மூன்று பேரும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.