பல வருடங்களின் பிறகு புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்கள்

0 218

இலங்கையில் பல வருடங்களின் பின்னர் புலமைபரிசில் பரீட்சையில் மாணவர்கள் சிலர் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு வெளியாகிய புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய இந்த விடயம் வெளியாகியுள்ளது.

இதுவரை வெளியாகிய தகவலுக்கமைய 10 மாணவர்கள் 200 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இலங்கையில் நீண்டகாலமாக எந்தவொரு மாணவரும் 200 புள்ளிகளை பெறவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நடந்த பரீட்சையில் இந்த சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.