முல்லை மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும் – கலாநிதி சுரேன் ராகவன்

0 250

ஒட்டிசுட்டான் ஆடைத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டதும், முல்லைத்தீவு மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வன்னித் தொகுதி தலைவருமான கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் ஒட்டுத் தொழிற்சாலைக்கு நேற்று (17) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு அதன் தற்போதைய நிலமைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

கைத்தொழில் அமைச்சின் ஊடாக அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்மூலம் ஒட்டிசுட்டான் மட்டுமன்றி முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.