சீனியின் விலையை 25 ரூபாவினால் அதிகரிக்க கோரிக்கை

0 223

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை உடனடியாக நீக்குமாறு சீனி இறக்குமதியாளர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீனி இறக்குமதியாளர்கள் 10 பேர், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். குறித்த வர்த்தகர்களினால் நிதி அமைச்சருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

குறித்த சீனி இறக்குமதியாளர்கள் 10 பேரின் கையொப்பத்துடனான கடிதத்தில் சீனியின் கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறும், ஒரு கிலோ சீனிக்கு 25 ரூபாய் விலை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.