நனோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பில் பரவும் வதந்திக்கு விவசாய அமைச்சு விளக்கம்

0 204

இந்தியாவிலிருந்து நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நனோ நைட்ரஜன் திரவ உரம், உரியவாறு தரம் உறுதிப்படுத்தப்பட்டதல்ல எனத் தெரிவிக்கப்படும் கருத்துக்களை நிராகரிப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுமார் 11,000 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்த நைட்ரஜன் உரத்தின் தரம் மற்றும் தன்மை என்பன உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மாதிரி பரிசோதனை அறிக்கையில், இந்தத் திரவ உரத்தின் தரம் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து கமநல திணைக்களத்தினூடாக அவற்றை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக உரச் செயலகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.