மோதல் காரணமாக பதற்றமான சூழல்! – கந்தளாய் பொலிஸ் பிரிவில் சம்பவம்!

0 220

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளுகஸ்வெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டு சம்பவமாக மாறியுள்ளதோடு சொத்துக்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் ஒரு பதற்றமான சூழல் நிலவுவதோடு, இளைஞர்கள் வெளியில் நடமாடுவதை தவிர்ந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலத்த வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் உள்ள லொறியொன்றினையும் பெட்டிக்கடை ஒன்றினையும் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதோடு, இச்சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு, கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.